Pages

Tuesday, December 5, 2023

உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்!


May be a doodle

 உலகை ஆளும் நாயகனே!

என்னுள் ஓடிக்கொண்டிருக்கும்
ஓயாத இயக்கத்தையும்,
அதை இயக்குபவனையும்,
எனக்குக் காட்டிக் கொடுத்தாய்!
அன்பே,
என் ஒரே வேண்டுகோள் இது தான்.
மயக்கத்தில் ஆழ்த்தும்
எல்லா கட்டளைகளையும்,
மருட்சியை விருட்சமாக்கும்
விதைகள் அனைத்தையும்,
தேடிப் பிடித்து
துவம்சம் செய்து விடு!
என்னுள் இருக்கும் என்னை எடுத்துக்கொண்டு
பதிலுக்கு,
என்னிடத்தில் உன்னை நிரப்பிவிடு!
~பரமேஸ்வரி
பரம் அத்வைத்.

No comments:

Post a Comment

To maintain goodness, all comments have been set to require moderation by the Admin