பாம்பு, பூரானோடு வாழ்வதை விட, தனியாக வாழ்ந்து விடுவது எவ்வளவோ மேல், இல்லையா? விஷம் சாப்பிடுவதை விட பட்டினியாக இருந்து விடலாம்.
பொறுமையாகக் காத்திரு! காத்திருத்தலும் பிரார்த்தனை தான். என்னை உன்னிடம் சேர்க்கத் தகுதியான துணை கிடைக்காததால், தனிமையில் காத்திருக்கிறேன் என்பது கூட அன்பு தான், ஆன்மீக சாதனை தான். சரியான திசையை நோக்கிப் போகக் கூடிய வண்டி கிடைக்கவில்லையென்றால், தவறான திசையில் செல்லும் வண்டியில் பயணம் செல்வோமா? காத்துக்கொண்டிருப்போம் அல்லது நடந்து போவோம். அது நமக்கு ஒப்புதல் தான். ஆனால், தவறான திசையில் செல்லும் வண்டியில் அமர ஒப்புக்கொள்ள மாட்டோம். சரியான நட்பு கிடைக்காததால் நான் உன்னைத் துணையாகப் பெற்றேன். ஆனால், சுமையாக வரும் யாரையும் என்னோடு சேர்த்துக்கொள்ளவில்லை.
வண்டியோடு உறவு கொள்வது எப்போது என்றால், அது உன்னை போக வேண்டிய இடத்திற்கு அழைத்துச் செல்லலும் போது தான். யாராவது உன்னிடம், விபத்துக்குள்ளாக்கும் வண்டியைக் கொண்டு வந்து கொடுத்தால், அந்த வண்டியில் போவதை விட கால்நடையாக நடந்து போவதே மேல் இல்லையா?
~ஆச்சார்ய பிரசாந்த் ஜி.
கசப்பு மிட்டாய் என்ற ஹிந்தி புத்தகத்திலிருந்து.
No comments:
Post a Comment
To maintain goodness, all comments have been set to require moderation by the Admin