குருவோடு சேர்ந்திரு - சின்னப்பயலே!
என்ன யோசிக்கிற எப்போதும்?
கரை கடக்க வேணுமின்னா
படகோட்டியோட நட்போட இருக்க வேணும் .
பற்று அற்றுப்போகுமடா ,
பவசாகரம் கடந்து போகலாமடா .
குருவோடு சேர்ந்திரு - சின்னப்பயலே!
என்ன யோசிக்கிற எப்போதும்?
காட்சி தெரிய வேணுமின்னா,
கண்ணாடியை தொடச்சு வைக்க வேணும் .
கண்ணாடியில் கரை படிஞ்சா,
காட்சி எங்கிருந்து கிடைக்கும்?
குருவோடு சேர்ந்திரு - சின்னப்பயலே!
என்ன யோசிக்கிற எப்போதும்?
வீதியிலே கூடுது ஓர் பெருங்கூட்டம் ,
அதை சும்மா வேடிக்கை பார்க்க போவோம்,
கூட்டமெல்லாம் கலைஞ்சு போனதும்
அன்னம் மட்டும் தனியே பறந்து போகும் .
குருவோடு சேர்ந்திரு - சின்னப்பயலே!
என்ன யோசிக்கிற எப்போதும்?
மனசை தேடிப் பார்த்தால் - கபீர் இங்கே ,
உள்ளே இருக்குது பார் வெட்டும் கத்திரிக்கோல்.
கத்திரி இணைப்பு விடுபடாவிட்டால் ,
நம்மைக் காலன் கொண்டு போய் விடுவான்!
குருவோடு சேர்ந்திரு - சின்னப்பயலே!
என்ன யோசிக்கிற எப்போதும்?
Translated by Parameswari Kumar.